எங்கு மனித இனம் மாண்பிழந்து கிடக்கிறதோ அங்கு மனிதர்கள் மனிதர்களாக இல்லை. மாண்பிழக்கக் காரணமானவரும் மனிதராக
இல்லை. மாண்பை இழந்துவிட்டு அதை சகித்துக் கொண்டு வாழ்பவரும் மனிதராக இல்லை. பிறர் மாண்பிழந்து அவமானப்படுவதை கண்டும் காணாமல் செல்பவரும் மனிதராக இல்லை. ஏனென்றால், இவர்கள் யாரிடமும் மனிதநேயம் உயிரோடில்லை.
பிறரை மதிப்போடும் மாண்போடும் நடத்த வேண்டும் என்பது வெறும் வேண்டுகோளோ, பரிந்துரையோ கிடையாது. அது ஒரு கட்டாயக் கடமை. மதிக்கலாம்... மதிக்காமலும் இருக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எதையாவது காரணம் காட்டி பிறரை இழிவுபடுத்துவது என்பது மனிதநேயத்திற்கு எதிராக நாம் இழைக்கும் பெரும் குற்றமாகும். பதவியை, படிப்பை, பணத்தை, சாதியை, தொழிலை காரணம் காட்டி சகமனிதரை தரக்குறைவாக நடத்துவதைவிட தரங்கெட்டச் செயல் ஏதுமில்லை.
மீன் தொழில் புரிவோரை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அவர்களது மாண்பும் மரியாதையும் பல இடங்களில் பல நபர்களால் சூறையாடப்படுவது நம்மில் யாருக்கும் தெரியாததல்ல. ஏனென்றால், அந்தப் பேருந்தில் நடந்ததுபோல எத்தனையோ நிகழ்வுகள் நமது கண்களுக்கு முன்னதாகவே நடந்திருக்க வாய்ப்புண்டு. அப்போதெல்லாம் நமது மனநிலை எவ்வாறு இருந்தது? சரி... அதை நம் ஒவ்வொருவரின் சுய ஆய்வுக்கு விட்டுவைப்போம்.
நமது வீட்டு முற்றங்களிலும், சந்தையிலும் மீன் கொண்டு வருபவர்களை நாம் எப்படி அழைக்கின்றோம் என்பதிலேயே நமது மனநிலை வெளிப்பட்டுவிடும். மேடம்... சார்... என்று அவர்களை அழைக்கச் சொல்லவில்லை. இந்த மீன் எவ்வளவுங்க... இது எவ்வளவும்மா... என்ன விலைக்குப்பா இந்த மீன் தருவீங்க... என்று மதிப்போடு அழைத்தால் என்னதான் குறைந்துவிடும். ஒருவேளை அப்படி அழைப்பதால் மீனின் விலை குறையலாம்!
சுளித்த முகத்தோடும் புளித்த வார்த்தையோடும் அவர்களை நெருங்காமல், மனிதநேயத்தோடு நடத்த முயற்சிக்கலாம் என்பதில்தான் என்ன சிக்கல்? மீன் விற்பனை செய்பவரில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது நாம் அறிந்ததே. நாம் அவர்களது சூழலை கொஞ்சம் கருத்தில் கொண்டால், நிச்சயமாக அவர்களை மதிக்கத் தோன்றும். அவர்களில் பலர் கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மோசமான பொருளாதார நிலையைக் கொண்டவர்கள், குடிகார பொறுப்பற்ற கணவரால் பாதிக்கப்பட்டவர்கள். நெஞ்சில் குடும்ப சுமையையும் தலையில் மீன் சுமையையும் சுமந்துவரும் அவர்களை நமது பார்வையால், வார்த்தைகளால், செயல்களால் அவமானப்படுத்துவதை விட அன்போடு நடத்தலாம் அல்லவா!
பிறரை மதிப்போடும் மாண்போடும் நடத்த வேண்டும் என்பது வெறும் வேண்டுகோளோ, பரிந்துரையோ கிடையாது. அது ஒரு கட்டாயக் கடமை. மதிக்கலாம்... மதிக்காமலும் இருக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எதையாவது காரணம் காட்டி பிறரை இழிவுபடுத்துவது என்பது மனிதநேயத்திற்கு எதிராக நாம் இழைக்கும் பெரும் குற்றமாகும். பதவியை, படிப்பை, பணத்தை, சாதியை, தொழிலை காரணம் காட்டி சகமனிதரை தரக்குறைவாக நடத்துவதைவிட தரங்கெட்டச் செயல் ஏதுமில்லை.
மீன் தொழில் புரிவோரை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அவர்களது மாண்பும் மரியாதையும் பல இடங்களில் பல நபர்களால் சூறையாடப்படுவது நம்மில் யாருக்கும் தெரியாததல்ல. ஏனென்றால், அந்தப் பேருந்தில் நடந்ததுபோல எத்தனையோ நிகழ்வுகள் நமது கண்களுக்கு முன்னதாகவே நடந்திருக்க வாய்ப்புண்டு. அப்போதெல்லாம் நமது மனநிலை எவ்வாறு இருந்தது? சரி... அதை நம் ஒவ்வொருவரின் சுய ஆய்வுக்கு விட்டுவைப்போம்.
நமது வீட்டு முற்றங்களிலும், சந்தையிலும் மீன் கொண்டு வருபவர்களை நாம் எப்படி அழைக்கின்றோம் என்பதிலேயே நமது மனநிலை வெளிப்பட்டுவிடும். மேடம்... சார்... என்று அவர்களை அழைக்கச் சொல்லவில்லை. இந்த மீன் எவ்வளவுங்க... இது எவ்வளவும்மா... என்ன விலைக்குப்பா இந்த மீன் தருவீங்க... என்று மதிப்போடு அழைத்தால் என்னதான் குறைந்துவிடும். ஒருவேளை அப்படி அழைப்பதால் மீனின் விலை குறையலாம்!
சுளித்த முகத்தோடும் புளித்த வார்த்தையோடும் அவர்களை நெருங்காமல், மனிதநேயத்தோடு நடத்த முயற்சிக்கலாம் என்பதில்தான் என்ன சிக்கல்? மீன் விற்பனை செய்பவரில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது நாம் அறிந்ததே. நாம் அவர்களது சூழலை கொஞ்சம் கருத்தில் கொண்டால், நிச்சயமாக அவர்களை மதிக்கத் தோன்றும். அவர்களில் பலர் கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மோசமான பொருளாதார நிலையைக் கொண்டவர்கள், குடிகார பொறுப்பற்ற கணவரால் பாதிக்கப்பட்டவர்கள். நெஞ்சில் குடும்ப சுமையையும் தலையில் மீன் சுமையையும் சுமந்துவரும் அவர்களை நமது பார்வையால், வார்த்தைகளால், செயல்களால் அவமானப்படுத்துவதை விட அன்போடு நடத்தலாம் அல்லவா!