
நாங்கள் கும்பிடும் தெய்வம்தான் உண்மையான தெய்வம். மற்றவையெல்லாம் வெறும் சிலைகள்... சாத்தான்கள்... என்று கூறுபவர்கள் நமது நாட்டில் அதிகம். இந்த மனநிலையால் உருவாகும் பிரச்சனைகளும் அதிகம். எங்கள் தெய்வத்திற்கு ஈடானது எதுவுமில்லை. நாங்கள் கும்பிடும் கடவுளால் மட்டுமே உலகை மீட்க முடியும். மற்றவையெல்லாம் வெறும் மாயை... பெரும் மயக்கம்... என்ற பேச்செல்லாம் நமது பாரத நாட்டின் பல்சமய சூழலுக்கு சிறிதளவும் ஏற்றதல்ல.

ஒரு கோவிலின் உச்சியில் சில புறாக்கள் அமர்ந்திருந்தன. அவை கீழே எட்டிப்பார்த்தபோது மனிதர்கள் ஒருவர் மற்றவரை வெட்டி சாய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டன. புறாக் குஞ்சு தாயிடம் கேட்டது, 'ஏம்மா அந்த மனிதர்கள் அடித்துக் கொள்கிறார்கள்?' தாய் சொன்னது, 'கீழே மதக் கலவரம் நடக்கிறது. கோயிலுக்கு செல்பவர்களும் மசூதிக்குச் செல்பவர்களும் இப்படி அடிக்கடி அடித்துக் கொள்வார்கள்.' புறாக் குஞ்சு வியப்போடு, 'அம்மா நாம் இதற்கு முன்னால் ஒரு மசூதியின் மீதிருந்தோம். இப்போது கோவிலின்; மீது அமர்ந்திருக்கிறோம். நாளை வேண்டுமானால் ஒரு கிறித்தவ ஆலயத்தின் மீது போய் அமருவோம். இதெல்லாம் ஒரு பிரச்சனையாக நமக்குத் தெரிவதில்லையே?' அதற்கு தாய் புறா, 'அதனால்தான் நாம் மேலே உயர்ந்து இருக்கிறோம். மனிதர்கள் இன்னமும் மட்டமாக தரைமட்டத்தில் கிடக்கிறார்கள்' என்றது.

நாம் கும்பிடும் தெய்வமே உண்மைக் கடவுளாகவும், மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாகவும் இருக்கட்டும்! அந்த உண்மை தெய்;வத்திடம் வேண்டி பிற சமயத்தவரையும் வாழ வைப்போம். நமது தெய்வ நம்பிக்கையால் பிற சமயத்தவருக்கும் நன்மை விளைந்தால் நல்லதுதானே? அதை விட்டுவிட்டு தனது கடவுளையும் சமயத்தையும் பற்றி ஆணவத் தம்பட்டம் அடிப்பதில் பலனில்லை.
ஒருவரை நாம் மதிக்கிறோம் என்றால் அவரது கருத்துக்களை, உணர்வுகளை, சமய நம்பி;க்கையை, வழிபாட்டு முறையை நாம் மதிக்கிறோம் என்றே அர்த்தம். நம்முடைய சமய நம்பிக்கையையும் நாம் வழிபடும் கடவுளையும் அவமதிப்பதை நம்மில் யார்தான் அனுமதிப்போம்? நாம் போட்டிருக்கும் சட்டையை ஒருவர் குறை கூறிவிட்டாலே நமக்கு கோபம் வந்துவிடும். நாம் வழிபடும் கடவுளையும், நமது வழிபாட்டுத் தலங்களையும் யாராவது இழிவுபடுத்தினால் விட்டுவோமா? பழிக்கப் பழி என்று கலவரங்கள் வெடித்து பல உயிர்களை பலிவாங்கிவிடுவோம் அல்லவா?
இதையெல்லாம் நன்கு உணர்ந்ததால்தான் நமது அரசியல் சாசனத்தை வடிவமைத்த சான்றோர்கள் இந்தியர் ஒவ்வொருவரும் தாம் விரும்பும் கடவுளை வழிபடவும், விரும்பிய முறையில் வழிபாடு நடத்தவும் சமய உரிமை உண்டு என்ற அற்புதமான உரிமையை உறுதிபடுத்தினார்கள்.
நீங்க என்ன நினைக்கிறீங்க

பிற சமயத்தவர் வழிபடும் தெய்வம் உண்மையில்லையா? ஏன்?
பல்சமய சூழலை நாம் பாதுகாக்க வேண்டுமா?
பிறரது சமய சுதந்திரத்தை அவமதிப்பதால் எற்படும் விளைவுகள் என்னென்ன?
All religions refer to the same God. Only the way of worship differ.
ReplyDeleteNice...
ReplyDelete