எப்படியாவது வல்லரசாக வேண்டும் என்று பல நாடுகள் கனவு காண்கின்றன. நாமும் அத்தகைய ஓர் கனவில் நித்தம் கண்விழித்துக் கொண்டிருக்கிறோம். 2020 ல் இந்தியா வல்லரசாவது உறுதி என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் செல்லும் இடமெங்கும் பெருமையுடன் பறைசாற்றி வருகிறார்.
அமெரிக்காவின் இந்த இலட்சிய வெறிக்கு யார் இடையூறாக இருந்தாலும் அமெரிக்கா ஈவிரக்கம் இல்லாமல் வம்பளந்து விடும். ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை சின்னாபின்னமாக்கியது போல தனது வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் எவரையும் சிதைத்துவிட அமெரிக்க கொஞ்சமும் அஞ்சப் போவதில்லை. உலகைப் பாதுகாக்கும் காவலன் என்ற வேடம் தரித்து பாடம் புகட்டி விடும்.
இந்த நிலையில், நமது நாடும் வல்லரசுக் கனவோடு பயணிக்கிறது. அதே வேளையில், அமெரிக்காவுக்கு கொஞ்சமும் வியர்த்துவிடாமல் பணிவோடு விசிறிக் கொண்டிருக்கிறது. எதிலும் அமெரிக்காவின் ஆசீர்வாதத்தோடு இயங்கவே நமது நாடு ஆசைப்படுகிறது. அமெரிக்கா தலையில் அடித்தாலும் அது செல்லமாகக் கொஞ்சுவதாகவே இந்தியா நினைத்துக் கொள்கிறது. போட்டியென்று வந்துவிட்டால் போட்டுப் பார்த்து விடுவோம் என்பதில் தெளிவாக இருக்கும் அமெரிக்காவுக்கு இந்தியாவின் வளர்ச்சி என்பது பெரும் போட்டியே. இதை ஒபாமாவே மறைமுகமாக தனது உரையிலே வெளிப்படுத்தியிருக்கிறார்.
பூனையின் கையைப் பிடித்து நடக்க எலி விரும்பினால் பூனை வேண்டாமென்றா சொல்லும்? என்றாவது ஒருநாள் அந்த எலி பூனைக்கு விருந்தாகப் போவது நிச்சயம். நமது நிலைமையும் அந்த எலியின் நிலைமையாகிப் போய்விடக்கூடாது என்பதில் கவனம் நிச்சயம் தேவை. நாமே வலிந்துபோய் நட்பு கொண்டாலும் வலியைத்தான் அனுபவிக்கிறோம். நம் நாட்டு அதிகாரிகள் அமெரிக்காவுக்குச் செல்லும்போது பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் அவமதிக்கப்படுவதையும் நமது மாணவர்கள் அவமானப்படுத்தப்படுவதையும் நமது நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
நீங்க என்ன நினைக்கிறீங்க
No comments:
Post a Comment