
அறுபது வயதுப் பெரியவரை ஆறே வயதுச் சிறுவன் தான் உயர்த்திக் கொண்ட சாதியில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக 'யோவ் ஆறுமுகம் இங்க வாயா' என்று எந்தவொரு உறுத்தலுமின்றி உரக்கக் கூப்பிடுவதன் நியாயம் என்ன? 'என்னங்க சாமி' என்று எந்தவொரு வருத்தமுமின்றி கூனிக் குறுகி நிற்கும் அந்தப் பெரியவரின் சுயஉணர்வு மழுங்கிப் போனதன் காரணம்தான் என்ன? மனித மலத்தைக் கையால் அள்ளி மலத்தோடு மலமாய் குறிப்பிட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும் நாறச்செய்தவன் எவன்? படிச்சாலும் காசுபணம் சம்பாதிச்சாலும் நீங்க அந்தப் பயலுகதானே என்ற ஆணவத்தைக் கற்பித்தவன் யார்? எல்லாத் தளங்களிலும் குறிப்பிட்ட மக்கள் சாதியின் பெயரால் காலங்காலமாக ஒரங்கட்டப்படுவதன் காரணமென்ன?

இந்திய மண்ணின் மிகப்பெரிய சாபம் சாதியம். இந்தியர்களின் உடல், உள்ளம், உயிர், ஆன்மா அத்தனையையும் ஆட்டிப் படைக்கிறது சாதி. பிறப்பில் தொடங்கி, வாழ்வின் ஒவ்வொரு கணமும் ஓயாமல் தொடர்ந்து, இறந்தபின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்போதும் குறுக்கே வந்து நிற்கிறது சாதி. இந்தியாவின் சட்டக் கல்லூரிகள் முதல் கல்லறைகள் வரை சாதியின் உடும்புப் பிடிக்குள் உருவிழந்துக் கிடக்கின்றன. சமூகம், சமயம், அரசியல், கல்வி, பொருளாதாரம் என எல்லா தளங்களிலும் சாதி நாற்றம் வீசுகிறது.

சாதித் தீ இந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் காலங்காலமாக கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கு இடமில்லாமல் மனிதர்களின் உயிரை, உடைமையை, மாண்பை சாதி சூறையாடுகிறது. சாதிப் பற்றினால் உடலும் உணர்வும் இரத்தமும் பற்றியெரிய சாதிவெறியர்கள் மிருகங்களாக உருவெடுத்து அரங்கேற்றும் வேதனைப்படக் கூடிய, வெட்கப்படக் கூடிய செயல்களைக் கண்டு நாமே நாம் தலைகளில் அடித்துக் கொள்ள வேண்டியதுதான்.
30.04.2008 அன்று உத்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்த்திக் கொண்ட சாதியினர் பயன்படுத்துகின்ற பாதையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 6 வயது சிறுமி நடந்து வந்த காரணத்திற்காக அவள் நெருப்புக்குள் தள்ளப்பட்டு உடல் முழுவதும் வெந்துபோனது. மனித மலத்தைத் தின்ன வைப்பது, சிறுநீரைக் குடிக்க வைப்பது, தாழ்த்தப்பட்டப் பெண்களை கொச்சையாகத் திட்டித் தீர்ப்பது, நிர்வாணமாக மரத்தில் கட்டி வைப்பது, பாலியல் பலாத்காரம் செய்வது இவ்வாறாக சாதியின் பெயரால் அரங்கேற்றப்பட்டு நியாயப்படுத்தப்படும் கொடுமைகள் ஆயிரமாயிரம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

சாதியத்தை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
சாதியத்தால் என்னென்ன தீமைகள் ஏற்படுகின்றன?
சாதியத்தை ஒழிக்க முடியுமா? என்னென்ன செய்யலாம்?
It basically depends upon the individuals perception. What do you mean by caste, creed? God has send us all, in this world without labelling our religion or caste or creed. He sees us all, as a human creature. So why can't we respect every human, with respect and humanity.
ReplyDelete