நம்மை இந்த உலகில் மிக அதிகமாக அன்பு செய்கிறவர்கள் யார்
தெரியுமா? நமது பெற்றோர்கள்தாம். மிக சிலருடைய வாழ்வில் மட்டுமே இது ஒரு விதிவிலக்காக இருக்கலாம். நமது துன்பத்திலும் இன்பத்திலும் நம்மைவிட அதிகம் அக்கறை காட்டுபவர்கள் நமது பெற்றோர்களே. நம் தாயின் கருவறையில் எறக்குறைய பத்து மாதங்கள் நாம் தங்கியிருந்தோம் என்ற உணர்வு நம்மை மெய்சிலர்க்க வைக்கிறது. தனது உதிரத்தை பாலாக்கி பாசத்தோடு நம் தாய் ஊட்டினார் என்ற உண்மை நம்மை பரவசப்படுத்துகிறது. நம்மை அன்போடு

நம்மை உயிருக்கு உயிராய் நேசிக்கும் பெற்றொர்களை மதிப்பதும் பேணுவதும் நமது தலையாய கடமையல்லவா? ஆனால் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் எதார்த்தங்கள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. பெற்றோர்களை திட்டித் தீர்ப்பதும், எட்டி உதைப்பதும், அநாதைகளாக கைவிடுவதும் இன்று அதிகம். 'வீட்டின் பெயரோ அன்னை இல்லம்... ஆனால் அன்னை இருப்பதோ அநாதை இல்லம்' என்ற அழகிய கவிதை வரிகள் இன்றைய எதார்த்தத்தை ஆழமாக எடுத்தியம்புகின்றன. படித்தவர்கள் மத்தியில்தான் பெற்றோர்களை அவமதிப்பதும் கைவிடுவதும் அதிகமாகக் காணப்படுகிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். முதியோர் இல்லங்களுக்கு சென்று பாருங்கள். அங்குள்ள தாய் தந்தையரின் கண்ணீர் கதைகளில் உருகாத மனமும்

சிவகங்கை மாவட்டம் கோமகோட்டை என்ற கிராமத்தைச் சார்ந்த அருள் என்பவரின் தாயார் பல ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக கிடக்கிறார். அருளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அன்றாடக் கூலி வேலைக்கு செல்லும் இவர் ஒவ்வொரு நாளும் தனது தாய்க்கு பல்துலக்கிவிட்டு, குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டிவிட்டு, மருந்து கொடுத்துவிட்டு வேலைக்கு செல்கிறார். சலித்துக் கொள்ளாமலும், முணுமுணுக்காமலும் தனது தாய்க்கு இந்த பணிவிடையை பல ஆண்டுகளாக அன்போடு செய்து வருகிறார். இப்படி ஓர் மகனைப் பெற அந்த தாய் என்ன தவம் செய்தாரோ என்று அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வியப்படைகின்றனர். நாமும் வியப்படைகிறோம் அல்லவா!
நீங்க என்ன நினைக்கிறீங்க?