
ஒரு குருவும் அவரது சீடர்களும் குதிரையில் சென்று கொண்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் குரு குதிரையை நிறுத்திவிட்டு 'எனது பை கீழே விழுந்ததை யாரும் பார்த்தீர்களா?' என்று கேட்டார். அதற்கு சீடர்கள், 'ஆம் குருவே... நாம் அந்த நதிக்கரை வளைவில் வந்து கொண்டிருந்தபோது உங்களது பை கீழே விழுந்தது' என்றனர். 'ஏன் யாரும் அதை எடுக்கவில்லை?' என்றார் குரு. 'ஏதாவது கீழே விழுந்தால் எடுக்க வேண்டுமென்று நீர்தாம் எங்களுக்கு கட்டளையிடவில்லையே. நீர் சொல்லாததை செய்ய நாங்கள் என்ன முட்டாள்களா?' என்றனர். 'சரி இனி ஏதாவது கீழே விழுந்தால் எடுங்கள்' என்று குரு சொல்ல பயணத்தைத் தொடர்ந்தனர். இன்னும் சற்று தூரம் சென்றவுடன் குரு குதிரையை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தார். பின்னால் வந்துகொண்டிருந்த சீடர்கள் எவரையுமே காணோம். குழப்பமடைந்தவர் வந்த வழியே திரும்பிச் சென்றபோது அதிர்ச்சியடைந்தார். சீடர்கள் அனைவரும் குதிரையை நிறுத்திவிட்டு வழிநெடுக குதிரைகள் போட்ட சாணத்தை அள்ளிக் கொண்டிருந்தனர். ஆத்திரமடைந்த குரு 'இதெல்லாம் என்ன?' என்று கேட்டார். 'நீர்தானே கீழே ஏதாவது விழுந்தால் எடுக்க வேண்டும் என்று கட்டளையீட்டீர்' என்றனர். குருவுக்கு கோபம் தலைக்கேறியது. சீடர்களை ஒருமுறை எரிச்சலுடன் முறைத்துப் பார்ததுவிட்டு, 'அதோ தெரிகிறதே அதுதான் நாம் செல்ல வேண்டிய மலை. நீங்கள் எல்லோரும் முன்னே செல்லுங்கள். நான் பின் தொடர்ந்து வருவேன். ஏதாவது விழுந்தால் நானே பார்த்துக் கொள்கிறேன்' என்றார். சற்று தூரம் சென்றதும் குதிரையின் கால்

தங்களின் சுயபுத்தியை பயன்படுத்தாத நபர்களாக இந்த சீடர்களை நாம் இனங்கண்டு கொள்ளலாம். யாராவது ஏதாவது சொன்னால் அதன்படி செய்வோம். நாங்களாக எதையும் சிந்தித்து செய்யமாட்டோம் என்ற தவறான மனநிலை இது.
No comments:
Post a Comment