

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளண்டன் ஒருமுறை நமது அண்டை மாநிலம் ஒன்றிற்கு வருகை தந்தார். அவர் வருவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து கொண்டிருந்த அந்த மாநில அரசு ஓர் இரகசிய ஆணை பிறப்பித்தது. என்ன ஆணை தெரியுமா? 'பில் கிளிண்டன் வருவதால் பிச்சைக்காரர்களையெல்லாம் சிறையிலடையுங்கள். அவர் முன்னால் நம் மானம் போய்விடக்கூடாது' என்பதுதான் அந்த ஆணை. இந்த அரசைப் போலவே நம்மில் பலருக்கும் பிச்சைக்காரர்கள் என்பவர்கள் இந்த நாட்டின் அவமானம்... சாபக்கேடு.

பேருந்து நிலையங்களில், இரயில் நிலையங்களில். கோவில் முற்றங்களில். தெருக்களில் பிச்சையெடுப்பவர்களை நாம் அனைவரும் பார்த்திருப்போம். கை கால் இழந்தவர்கள், பார்வை தெரியாதவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் என பலர் நம்மிடம் பிச்சைக்கேட்டு கையேந்தியிருப்பார்கள். அந்த நேரங்களில், சிலர் ஐயோ பாவம் என்று இரக்கப்பட்டு காசு போட்டிருப்போம். சிலர் ஏதோ கண்டும் காணாமலும் ஒதுங்கி போயிருப்போம். இன்னும் சிலர், 'ஏன் பிச்சையெடுக்கிற.. நல்லா உழைச்சு சாப்பிட வேண்டியதுதானே' என்று அறிவுரை மட்டும் சொல்லியிருப்போம்.
.jpg)
பிச்சையெடுப்பவர்கள் பல காரணங்களை சொல்லி நம்மிடம் கையேந்தாலாம். ஏன் சிலர், பிச்சைக்காரர்கள் என்ற பெயரில் பொய் சொல்லியும் காசு வாங்கலாம். எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும்சரி, நம்மிடம் கையேந்துபவர்களை மதிப்போடு நடத்துவது நல்லது. அவர்களுக்கு காசு கொடுக்கிறோமோ இல்லையோ, அவர்களை ஏளனமாக பார்ப்பதையும், அவமானப்படுத்துவதையும், வார்த்தைகளால் காயப்படுத்துவதையும் தவிர்ப்பது மிகவும் நல்லது. சில டீக்கடைக்காரர்கள் சுடுதண்ணீரை அவர்கள்மேல் ஊற்றி மனிதாபிமானமில்லாமல் நடந்துகொள்கின்றனர். ஏதோ ஒரு காரணத்தினால் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களை மதிப்போடும் மாண்போடும் நடத்துவதில்தான் நமது மனப்பக்குவம் வெளிப்படுகிறது.

விசேச நாட்களில் சில நல்லவர்கள் இவ்வாறு தெருவில் சுற்றித் திரிபவர்களையெல்லாம் அழைத்துவந்து சாப்பாடு கொடு;த்து மகிழ்வதுண்டு. மதுரையைச் சார்ந்த கல்லூரி ஒன்றின் மாணவர்கள் மிக அற்புதமான செயலை செய்திருந்தனர். என்னவென்றால், மதுரையின் சுற்றுப்புறங்களிலுள்ள பிச்சைக்காரர்களை தேடிச்சென்று, அவர்களுக்கு முடிவெட்டிக் கொடுத்து, குளிப்பாட்டி, நல்ல சாப்பாடும் கொடுத்து தங்களது மேலான சமூக அக்கறையை வெளிப்படுத்தினர். பிச்சைக்காரர்களை தரக்குறைவாக நடத்தும் மனிதர்கள் மத்தியில் அவர்களை மதிப்போடும் மாண்போடும் நடத்தும் மாணிக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?
ஏன் பிச்சையெடுக்கிறார்கள்? குழந்தைகளை ஏன் பிச்சையெடுக்க வைக்கிறார்கள்?
உங்களிடம் கையேந்தியவர்களை நீங்கள் எப்படி நடத்தினீர்கள்?
எந்தெந்த வழிகளில் அவர்களுக்கு உதவி செய்யலாம்?
No comments:
Post a Comment