
'ஒரு குழந்தை பிறந்தவுடன்
நீங்கள் எதையெதையோ கற்றுக் கொடுக்கத் தயாராகிறீர்கள்
உண்மையில் நீங்கள்தான்
அக்குழந்தையிடம் கற்றுக்கொள்ள வேண்டும்'
- சத்குரு ஜக்கி வாசுதேவ்

இவ்வாறு குழந்தைகள் இருக்கும் இடமெல்லாம் சொர்க்க பூமியாக மாறிவிடுவதை நாம் அனுபவிக்கிறோம். அது கோவிலாக இருந்தாலும் சரி.. மருத்துவமனையாக இருந்தாலும் சரி.. ஏன் இறப்புச் சடங்கு நடக்கும் வீடாக இருந்தாலும் சரி... குழந்தைகள் அந்த இடங்களை தங்களது மழலை வார்த்தைகளாலும் கள்ளங்கபடற்ற செயல்களாலும் சொர்க்கமாக மாற்றி விடுகிறார்கள். குழந்தைகளின் செல்ல மொழியும் தெய்வீக புன்னகையும் சுட்டித்தனமான செயல்களுங்கூட நம்மை அப்படியே மெய்மறக்க செய்துவிடுகின்றன. இதனால்தான் 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும்! ஆம். தெய்வம் இருக்கின்ற இடத்தில் ஆனந்தமும் நிம்மதியும் இருப்பது இயல்புதானே.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

குழந்தைகளோடு நீங்கள் பெற்ற மறக்கமுடியாத நிகழ்வுகள் ஏதேனும் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? அதில் ஏதேனும் ஒரு நிகழ்வை நினைத்துப் பார்த்து இன்றைய நாளில் சந்தோசமாக இருங்களேன்...
குழந்தைகளிடம் மட்டும் எப்படி இவ்வளவு நல்ல குணங்கள் காணப்படுகின்றன?
நாமும் குழந்தைகளாக இருந்தவர்கள்தானே? நமது சிறுவயது நல்ல குணங்களெல்லாம் நம்மிடம் இப்போது இருக்கிறதா? இல்லையேல் அவை எங்கு போயின?
குழந்தைகள் போல் வாழ நாம் அன்றாடம் என்னென்ன செய்யலாம் ?
👍👍👍👍👍
ReplyDelete